என் கைப்பேசிகள்,மின்னஞ்சல்கள்,ஆர்குட்,ஆகிய தகவல் தொடர்புகள் அனைத்தும் அன்று தான் சுறுசுறுப்பாயிருந்தன. அந்நாள் முழுவதும், என்னை பதிவிலும், பின்னூட்டத்திலும், மின்னஞ்சலிலும், நேரிலும், உள் நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தொலைபேசி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் நன்றி!!!!!
வீட்டாருக்கோ, உறவினர்களுக்கோ,என் பிறந்த நாள் எப்போது என்று கூட தெரியாது. நானும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனால், இந்த பிறந்த நாளுக்கு பப்புவிலிருந்து – டி.வி.ஆர் ஐயா வரை அன்று முழுவதும் வாழ்த்துக்களால் என்னை நிறைத்தீர்கள். மகிழ்ச்சியில் திளைத்தேன். மறக்கவொண்ணா நாளாக்கிய அனைவருக்கும் நன்றி!!!!!

முந்தைய தினம், பதிவுகளின் மூலம் பழக்கமான தர்மர் அண்ணாச்சியை, கோவையில் சந்தித்தேன். இவர் பதிவர் அல்ல. அவருக்கும் விருதுநகர் தான். ஆனால், 22 வருடங்களாக தில்லியிலும், இப்போது சவுதியிலும் பணிபுரிந்து வருகிறார்.
டெல்லியிலேயே வளர்ந்த தன் மகளிடம், ” விருதுநகர் மக்கள், கலாச்சாரம், மொழி பற்றி தெரிய வேண்டுமானால், உங்கள் பதிவுகளை படித்து தெரிந்து கொள்ளச் சொல்லியிருக்கிறேன் “ என்று அவர் சொன்னதை என் எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.
அதே சமயம், அப்படி என்ன எழுதிவிட்டே(டா)ன் என்ற சந்தேகம், உங்களை மாதிரி எனக்கும் இருக்கிறது. இனி, இனியாவது அடிக்கடி எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை உங்கள் அன்பு எனக்களிக்கிறது.
நன்றி நண்பர்களே!
Comments on: "நிறைவு" (19)
தாமதமான வாழ்த்துக்கள் வெயிலான் !!
வாழ்த்துக்கு நன்றி கதிர்!
“Many More Happy Returns of the Day”
Sorry for Belated wishes!
வாழ்த்துக்கள் நண்பரே
Thanks Agnipaarvai!
நன்றி நிலா!
//வீட்டாருக்கோ, உறவினர்களுக்கோ,என் பிறந்த நாள் எப்போது என்று கூட தெரியாது. நானும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.//
வெளையாட்டு புள்ளை !
நானும் நேரம் கடந்து வாழ்த்து சொல்கிறேன். நமக்குள்ள என்ன ?
வாழ்த்துகள் ரமேஷ் !
நன்றி
நன்றி டி.வி.ஆர் ஐயா!
நன்றி சிங்கப்பூரார்களே!
//டெல்லியிலேயே வளர்ந்த தன் மகளிடம், ” விருதுநகர் மக்கள், கலாச்சாரம், மொழி பற்றி தெரிய வேண்டுமானால், உங்கள் பதிவுகளை படித்து தெரிந்து கொள்ளச் சொல்லியிருக்கிறேன் “ என்று அவர் சொன்னதை என் எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.//
ஆகா..வாழ்த்துகள்! தங்கள் மகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சி!
நன்றி சந்தனமுல்லை!
தாமதமான வாழ்த்துக்கள் வெயிலான்
நன்றி செந்தில்!
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்..
நன்றி சம்பத்!
//இனி, இனியாவது அடிக்கடி எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை உங்கள் அன்பு எனக்களிக்கிறது.///
நிச்சயம் வேலை பளு மிகா நேரங்களில் உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ளுங்கள் !
நிச்சயம் ஆயில்ஸ்! நன்றி!